நவம்பர் 23 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Nov 23, 2014, 04:54 PM

இன்றைய (23-11-2014) பிபிசி தமிழோசையில்

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது குறித்து ஆளும் கூட்டணியில் உள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று நடத்திய கூட்டம் குறித்த செய்தி;

இந்த தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கப்போவதாக முன்பு அறிவித்திருந்த ஆளும் கூட்டணியிலுள்ள மலையக மக்கள் முன்னணி தமது முடிவை மறுபரிசீலனை செய்யவுள்ளதாக அறிவித்திருப்பது குறித்த செவ்வி;

இலங்கை அரசை விட்டு தான் வெளியேறிய பின் கடந்த 48 மணிகளுக்குள் இலங்கை அரசு பெரும் இக்கட்டான நிலைக்கு தள்ளப் பட்டுள்ளதாக எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்த தகவல்;

இலங்கையின் வடகடலில் நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்களை மூன்று படகுகளுடன் கடற்படையினர் கைது செய்துள்ளது குறித்த விவரங்கள்;

நிறைவாக வேர்களை வெறுக்கும் விழுதுகள் தொடரின் மூன்றாவது பகுதி ஆகியவற்றைக் கேட்கலாம்.