டிசம்பர் 21 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Dec 21, 2014, 05:53 PM

இன்றைய (21-12-2014) பிபிசி தமிழோசையில்

இலங்கை ஜனாதிபதித் தேர்தலை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு புறக்கணிக்கப் போவதில்லை என்று அந்த அமைப்பு அறிவித்திருப்பது குறித்து அந்த அமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜாவின் செவ்வி;

இந்தியாவில் கட்டாய மதமாற்றத்தடைச் சட்டம் கொண்டுவரும் ஆளும் பாஜகவின் முயற்சியை இந்தியாவின் மூன்று முன்னனி கிறித்தவ கூட்டமைப்புகள் ஒன்றாக எதிர்த்திருப்பதற்க்கு என்ன காரணம் என்று இந்த எதிர்ப்பை வெளியிட்டிருக்கும் அமைப்புக்களின் ஒன்றான கத்தோலிக்க திருச்சபையின் புதுச் சேரி கடலூர் மறைமாவட்ட கல்விக்குழுத்தலைவர் அருட்தந்தை சுவாமிநாதனின் செவ்வி;

திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் நெப்போலியன் ஆளும் பாஜகவில் சேர்ந்திருப்பது ஏன் என்பது குறித்து அவர் பிபிசி தமிழோசைக்கு அளித்த பிரத்யேக செவ்வி;

நிறைவாக வேர்களை வெறுக்கும் விழுதுகள் தொடரின் ஏழாவது பகுதி ஆகியவற்றைக் கேட்கலாம்.