பிபிசி தமிழோசை 04/08/2013

Aug 04, 2013, 04:27 PM

Subscribe

இந்தியாவின் உத்தர்பிரதேச மாநிலத்தில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள அதிகாரி துர்கா நாக்பால் விவகாரம் தொடர்பில் மாநில அரசிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறுகிறது.

மீனவர் பிரச்சினை தொடர்பில் பேசுவதற்காக தமிழக மீனவர்கள் இலங்கை செல்லவிருந்த பயணம் தாமதமடைந்துள்ளது.

இலங்கையில் போர் பாதித்த பிரதேசங்களில் சமூகப் பணியாற்றிய பெண்மணிக்கு ஐ நா அமைப்பின் ஒரு விருது வழங்கப்படவுள்ளது.

கிழக்கிலங்கையில் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் ஒரு ஊர்வலத்துக்கு பாதுகாப்பு படையினர் இடைஞ்சல் ஏற்படுத்த முயன்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

எண்ணெய் பனையின் முழுமையான மரபணுக் கட்டமைப்பை மலேசிய விஞ்ஞானிகள் தொகுத்துள்ளனர்