'தமிழ் மக்களுக்கு ஐநா தீர்மானத்தால் பலன் கிடையாது' - கஜேந்திரகுமார்
Share
Subscribe
ஐநா மனித உரிமைக் கவுன்ஸிலில் இலங்கை குறித்து கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசுக்கு எதிரான ஒரு தீர்மானமாக அல்லாமல் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிரான ஒரு தீர்மானமாகவே தாம் கருதுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியுள்ளார்.
இந்தத் தீர்மானம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு ஒரு அழுத்தத்தை கொடுத்தாலும் அதனால் இலங்கை தமிழ் மக்களுக்கு பெரிதாக எந்த விதமான பலனும் கிடைக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து தமிழோசைக்கு செவ்வி ஒன்றை வழங்கிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள், இருந்தபோதிலும் அந்த தீர்மானத்தின்படி ஒரு விசாரணை ஒன்று இலங்கையில் நடக்குமானால், அதில் மக்கள் கலந்துகொள்வதை தாம் எதிர்க்க மாட்டோம் என்றும் கூறியுள்ளார்.
அவரது முழுமையான செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.
