இன்றைய (ஏப்ரல் 1) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Apr 01, 2014, 05:01 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்

இலங்கைத் தமிழர்களின் 16 புலம்பெயர் அமைப்புகளைத் தடை செய்ய இலங்கை அரசு முடிவு எடுத்திருப்பது பற்றிய செய்தி, இந்த முடிவு குறித்து, தடை செய்யப்படவுள்ள பிரித்தானியத் தமிழர் பேரவையின் கருத்து

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைவழக்கில் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்டவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள்தண்டனையாக்க் குறைத்த்தை மறு பரிசீலனை செய்ய மத்திய அரசு தொடுத்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது பற்றிய செய்தி

உயர் அதிகாரிகள் ஓய்வு பெற்றபின்னர் அரசியலில் ஈடுபடுவது சரியா என்பது குறித்து முன்னாள் அமைச்சரவைச் செயலர் டி.எஸ்.ஆர்.சுப்ரமணியன் தெரிவிக்கும் கருத்து

இலங்கையில் புத்த பிக்குகள் வாகன ஓட்டுநர் உரிமம் பெற அரசு விதித்த தடையை நீதிமன்றம் சரியானது என்று தீர்ப்பளித்திருப்பது பற்றிய செய்தி

பின்னர் அனைவர்க்கும் அறிவியல் ஆகியவை கேட்கலாம்