காவிரி: தேசியக் கட்சிகள் "இரட்டை நிலை"யா?

Jun 10, 2014, 04:43 PM

Subscribe

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள் முதல்வர் சித்தராமையா தலைமையில் இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்து, காவிரி நதிநீர்ப் பங்கீடு குறித்து மேலாண்மை வாரியம் ஒன்றை அமைக்க்க்கூடாது என்று வலியுறுத்தினர்.

காவிரி நீர்ப்பிரச்சினையில், கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸ்கட்சியும், முக்கிய எதிர்க்கட்சியான பாஜகவும் அங்கு ஒருமித்த கருத்தை எடுத்திருக்கும் நிலையில், தமிழ்நாட்டின் பாஜக இந்த விஷயத்தில் என்ன நிலைப்பாட்டை எடுக்கிறது என்று பிபிசி தமிழோசையிடம் கருத்து தெரிவித்தார் தமிழக பாஜக பொதுச்செயலர் தமிழிசை சௌந்தர்ராஜன்