ஜூன் 18 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (ஜூன் 18, 2014) பிபிசி தமிழோசையில்
கடந்த வாரம் அளுத்கம மற்றும் அதையொட்டியப் பகுதிகளில் இடம்பெற்ற வன்செயல்களில் நான்கு பேர் உயிரிழந்த நிலையில், அப்பகுதிக்கு ஜனாதிபதி மந்திரா ராஜபக்ஷ இன்று நேரில் சென்று பார்வையிட்டிருப்பது குறித்த செய்திகள்;
இது தொடர்பில் கொழும்பிலும் லண்டனிலும் நடந்திருக்கும் ஆர்பாட்டங்கள் குறித்த செய்திகள்;
இலங்கையின் இறுதிப்போரில் நடந்த மனித உரிமைமீறல்கள்மீது விசாரணை நடத்த இலங்கை வரும் ஐநா மன்றக்குழுவை அனுமதிக்க மறுக்கும் அரசின் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்த தமிழ்தேசிய கூட்டமைப்பின் கருத்துக்கள்;
இராக்கின் மோசுல் நகரில் வேலை செய்து வந்த 40 இந்தியக் கட்டுமானப் பணியாளர்கள் கடத்தப்பட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்திருப்பது குறித்த செய்திகள்;
இலங்கையின் இறுதிப்போரில் நடந்த மனித உரிமைமீறல்கள்மீது விசாரணை நடத்த இலங்கை வரும் ஐநா மன்றக்குழுவை அனுமதிக்க மறுக்கும் இலங்கை அரசின் தீர்மானம் இன்று இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருப்பது குறித்த செய்திகள்
இராக்கின் மோசுல் நகரில் வேலை செய்து வந்த 40 இந்தியக் கட்டுமானப் பணியாளர்கள் கடத்தப்பட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்திருப்பது குறித்த செய்திகள்;
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தொடர்புடைய நிறுவனங்கள் தம்மை இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி போட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு அந்த நிறுவனங்கள் மீது 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருப்பது பற்றிய செய்திகள்
பலகணியில், இமயமலையேறும் சுற்றுலா பயணிகளுக்கு துணைக்குப்போகும் ஷெர்பாக்கள் எனப்படும் உள்ளூர் வழிகாட்டிகளின் கண்ணீர்க்கதைகள் தொடர்பான பெட்டகம் ஆகியவற்றை கேட்கலாம்.
