அதிர்ச்சியில் இருந்து மீளாத ஷெர்ப்பாக்கள்:

Jun 19, 2014, 12:01 PM

Subscribe

எவரெஸ்ட் சிகரத்தில் கடந்த ஏப்ரலில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 16 ஷெர்ப்பாக்கள் பலியான சம்பவத்தை அடுத்து, அதன் அதிர்ச்சியில் இருந்து இன்னமும் அவர்கள் மீளவில்லை.

அந்த சிகரத்தில் நடந்த விபத்துக்களில் மிகவும் பெரிய விபத்தாக கருதப்படும் இந்த விபத்தை அடுத்து, ஷெர்ப்பாக்கள், நல்ல ஊதியமும், வேலை நிலைமைகளையும் கோரி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இவை குறித்து அங்கு சென்ற பிபிசி நேபாள சேவையின் நவீன் சிங் கட்கா அவர்கள் வழங்கும் செய்திக் குறிப்பு.