ஜூன் 25 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (25-06-2016) பிபிசி தமிழோசையில்
இலங்கை மீதான ஐ நா விசாரணைக் குழுவுக்கு ஒத்துழைப்பும், ஆலோசனையும் வழங்கவுள்ள வல்லுநர்கள் பெயர்களை மனித உரிமைகள் பேரவைய அறிவித்துள்ளது குறித்த செய்திகள்;
கடும்போக்கு பௌத்த அமைப்பான, பொது பல சேனாவுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்ட பௌத்த பிக்கு வட்டரக்க விஜித தேரர், தன்னைத்தானே தாக்கிக்கொண்டு பொய்ப் புகார் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருப்பது குறித்த செய்திகள்;
இலங்கையில் முஸ்லீம்கள் மீதான தாக்குதலை கண்டித்து இன்றுமாலை முஸ்லிம்கள் கலந்து கொள்ளும் பிராத்தனை மற்றும் கவன ஈர்ப்பு பேரணிக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருப்பது குறித்த செய்திகள்;
முன்னீஸ்வரம் கோவிலில் மிருகபலி கொடுக்கும் பூசைமுறைக்கு தடைவிதிக்கவேண்டும் என்று புத்தபிக்குகள் தொடுத்த வழக்கில் அப்படியான பொத்தாம் பொதுவான தடை உத்தரவு ஒன்றை விதிக்க முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்திருப்பது குறித்த செய்திகள்;
இந்தியாவில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல்களில், திமுகவின் படுதோல்விக்கு காரணமானவர்கள் என்று கட்சித் தலைமையால் குற்றம் சுமத்தப்பட்டு இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கும் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கே.பி.ராமலிங்கத்தின் செவ்வி;
நிறைவாக இன்றைய பலகணியில், தொழில்நுட்பத்திற்கு அடிமைப்பட்டிருப்போருக்கு சிகிச்சை அளிக்கும் ‘ஷட் கிளினிக்’ என்ற அமைப்பு பற்றிய பெட்டகம் ஆகியவற்றைக் கேட்கலாம்.