இன்றைய ( ஜூன் 30) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jun 30, 2014, 04:23 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்

இராக்கில் பெருமளவில் நிலப்பரப்பைப் பிடித்த ஐஸிஸ் கிளர்ச்சி அமைப்பு, இஸ்லாமிய அரசொன்றை, சிரியா இராக் ஆகிய இரு நாடுகளில் தான் பிடித்த பிரதேசங்களைச் சேர்த்து உருவாக்குவதாக அறிவித்திருப்பது பற்றிய கண்ணோட்டம்

இலங்கை மீதான ஐந மன்ற விசாரணைக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டவர்களில் ஒருவரானபாகிஸ்தான் மனித உரிமையாளர் அஸ்மா ஜெஹாங்கீர் விசாரணை எவ்வாறு நட்த்தப்படும் என்பது குறித்து பிபிசிக்கு தெரிவித்த கருத்துக்கள்

இந்த விசாரணையில் சாட்சியமளிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக இலங்கை அரசு கூறுவதைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கண்டித்திருப்பது பற்றிய செய்தி

சென்னையில் கட்டிட விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்திருப்பது பற்றிய செய்தி

ஆகியவையும்

பின்னர் விளையாட்டரங்கம்

நிகழ்ச்சியும் இடம்பெறுகின்றன