"நீதிமன்றத்திடம் அளித்த உறுதியை ஆஸ்திரேலிய அரசு மீறிவிட்டது"

Aug 02, 2014, 06:30 PM

Subscribe

ஆஸ்திரேலியாவில் அகதித்தஞ்சம் கோரிச்சென்றிருக்கும் 157 தமிழர்களை 72 மணி நேர முன்னறிவிப்பு கொடுக்காமல் வேறு நாட்டுக்கு அனுப்ப மாட்டோம் என்று ஆஸ்திரேலிய அரசு முன்பு நீதிமன்றத்தில் கொடுத்த உறுதிமொழியை மீறி அவர்களை அவசர அவசரமாக வெள்ளியன்று இரவோடிரவாக ஆஸ்திரேலிய அரசு நவுரு தீவுக்கு அனுப்பியிருப்பதாக கூறுகிறார் ஆஸ்திரேலிய தமிழர் பேரவையைச் சேர்ந்த பால விக்னேஸ்வரன்