ஜோசப் வாஸ் புனிதராக அங்கீகாரம்

Sep 18, 2014, 03:55 PM
Share
Subscribe

இலங்கையில் 17 ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவ மத போதகராக செயல்பட்ட ஜோசப் வாஸ் அவர்களை புனிதராக அதிகாரபூர்வமாக கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்ஸிஸ் அங்கீகரித்துள்ளார்.

இந்தியாவின் கோவாவில் பிறந்த ஜோசப் வாஸ் அவர்கள் இலங்கையில் கத்தோலிக்கம் நிலைபெற உழைத்தவராக வத்திக்கான் திருச்சபையால் பார்க்கப்படுகின்றார்.

இந்த அறிவிப்பு குறித்து வத்திக்கான் வானொலியின் தமிழ்ப் பிரிவில் தயாரிப்பாளராகவுள்ள அருட்சகோதரி தெரேஸா அவர்களின் தகவல்களை நேயர்கள் இங்கு கேட்கலாம்.