'அதிமுகவிடம் இழப்பீடு வாங்கவேண்டும்' : டிராபிக் ராமசாமி
Sep 28, 2014, 04:48 PM
Share
Subscribe
ஊழல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதை எதிர்த்து ஆளும் அதிமுகவினர் தமிழ்நாட்டில் இரண்டு நாட்கள் நடத்திய வன்முறைகளால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு அதிமுகவிடம் இழப்பீடு கோரவேண்டும் என்று டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார்.
இந்த வழக்கு குறித்தும் இதில் அவர் முன்வைத்திருக்கும் முக்கிய கோரிக்கைகள் குறித்தும் டிராபிக் ராமசாமி பிபிசி தமிழோசக்கு அளித்த பிரத்தியேக செவ்வி.
