3 நாட்களில் 11 குறைமாதப் பிள்ளைகள் உயிரிழந்த காரணம்: தர்மபுரி மருத்துவமனை அதிகாரி விளக்கம்
Share
Subscribe
தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கான மருத்துவப் பிரிவில் கடந்த மூன்று நாட்களில் உயிரிழந்துள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது
ஞாயிறன்று ஐந்து மணி நேர இடைவெளியில் ஆறு குழந்தைகள் உயிரிழந்திருந்த இந்த இடத்தில் திங்களன்று மேலும் ஐந்து குழந்தைகள் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
பிறந்த குழந்தைகளின் ஆரோக்கியத்தில் நிபுணத்துவம் பெற்ற மூத்த மருத்துவர்கள் சிலரை தமிழக அரசு சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளது.
குழந்தைகள் இறந்தமைக்கான காரணங்கள் பற்றி இந்த மருத்துவமனையின் பீடத்தலைவரான (Dean) டாக்டர் நாராயண பாபு தமிழோசைக்கு தெரிவித்த கருத்துகள்.
