'முஸ்லிம் காங்கிரஸ் இன்னமும் முடிவெடுக்கவில்லை' - ஹசன் அலி
ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பதை தமது கட்சி இன்னமும் முடிவு செய்யவில்லை என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலரான ஹசன் அலி அவர்கள் கூறியுள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலரான மைத்திரிபால சிறிசேன அவர்கள் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக, தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக வரக்கூடிய ஜனாதிபதி தேர்தலில் நிற்கலாம் என்ற நிலை ஏற்பட்டிருக்கும் சூழிநிலையிலேயே ஹசன் அலி அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் பிபிசிக்கு வழங்கிய செவ்வியை இங்கு கேட்கலாம்.