'சதித்திட்டக்' குற்றச்சாட்டை எதிர்நோக்கும் இலங்கையின் தலைமை நீதியரசர்
Share
Subscribe
தற்போதைய தலைமை நீதியரசர் மொஹான் பீரிஸ் உடனடியாக பதவிவிலக வேண்டும் என்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் சட்டத்தரணிகள் ஒன்றியமும் ஏகமனதாக தீர்மானம் எடுத்துள்ளதாக சட்டத்தரணிகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் கே.எஸ். ரட்ணவேல் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் மக்கள் தீர்ப்புக்கு எதிராக மகிந்த ராஜபக்ஷ இராணுவத்தைக் கொண்டு தொடர்ந்தும் ஆட்சியிலிருக்க திட்டம் தீட்டியதாகவும் அந்த சதித்திட்டத்தில் தலைமை நீதியரசர் மொஹான் பீரிஸுக்கும் பங்கு உண்டு என்றும் சட்டத்தரணி ரட்ணவேல் தெரிவித்தார்.
'மக்களின் தீர்ப்புக்கு எதிராக பலவிதமான சதித்திட்டங்கள் போடுவதற்கு எத்தனிக்கப்பட்டிருந்த அந்த நேரத்தில் நாட்டின் நீதியின் காவலனாக இருக்க வேண்டியவர் அங்கு பிரசன்னமாகி இருந்தார்' என்றார் ரட்ணவேல்.
