"புண்படாமல் சிரிக்கவைத்த கார்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மண்"

Jan 26, 2015, 04:32 PM

இந்தியாவின் பிரபல கேலிச்சித்திர இதழியலாளர் ஆர்.கே.லக்ஷ்மண் இன்று காலமானார். பல தசாப்தங்கள் இந்தியாவின் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ இதழில் தனது கேலிச்சித்திரங்கள் மூலம் இந்திய அரசியல், பொதுவாழ்வின் பிற அம்சங்கள் போன்றவற்றைப் பற்றி மக்களின் முன்வைத்தவர் , சிரிக்கவைத்து சிந்திக்கவும் வைத்தவர் என்று அவர் பாராட்டப்படுகிறார். இவரது கேலிச்சித்திரங்கள் பிறர் மனது புண்படாத வகையில் இருந்தன, கண்ணியமான அவமதிப்பை, கண்ணியமான கேலியைக் கைக்கொண்டிருந்தவர் அவர் என்கிறார் இந்து நாளிதழின் கேலிச்சித்திரக்காரர் கேஷவ்.