ஆகஸ்ட் 24, 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (24-08-2015) பிபிசி தமிழோசையில்
இலங்கை நாடாளுமன்றத்திற்கான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியலில் நியமிக்கப்படவேண்டிய இருவரை அந்த கட்சி அறிவித்திருப்பது குறித்த செய்தி;
இந்த நியமனங்களை கடுமையாக விமர்சித்துள்ள சுரேஷ் பிரேமச்சந்திரனின் கருத்துக்கள்;
சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு சம்பந்தரின் பதில்;
இலங்கையின் பாரிய ஊழல் மோசடிகள் குறித்து ஆராயும் விசேஷ ஜனாதிபதி ஆணைக்குழு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் வாக்கு மூலத்தை பதிவு செய்திருப்பது குறித்த செய்திகள்;
இலங்கையின் ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல் போன சம்பவம் குறித்து மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டிருப்பது குறித்த செய்தி;
இலங்கையின் புதிய அரசாங்கத்தின் முன்று அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக்கொண்டுள்ளது குறித்த செய்தி;
சிரியாவில் புராதனச் சின்னங்கள் அமைந்துள்ள பல்மைரா நகரில், பழங்காலத்து கோயில் ஒன்றை, ஐஎஸ் ஆயுதக் குழுவினர் வெடிவைத்து தகர்த்ததுள்ளதாக அந்நாட்டின் அதிகாரிகள் அறிவித்திருப்பது குறித்த செய்தி;
நிறைவாக விளையாட்டரங்கம் ஆகியவற்றைக் கேட்கலாம்.
