செப்டமர் 30 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மீது நடத்தப்பட்ட கொலைமுயற்சி வழக்கில் இருவருக்கு பல நூறு வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பது, இலங்கை சிறைகளில் அரசியல் கைதிகளாக சிறையில் இருப்பவர்களின் குழந்தைகள் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனைச் சந்தித்திருப்பது குறித்த செய்தி, தமிழ்நாட்டின் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற வரலாற்றிலேயே முதன்முறையாக வழக்கு விசாரணை ஒன்று நேரலையாக ஒளிபரப்பப்பட்டது குறித்து ஒரு செவ்வி, 2006ஆம் ஆண்டு மும்பை ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பது உள்ளிட்ட செய்திகள் இன்றைய தமிழோசையில் இடம்பெற்றிருக்கின்றன
