மறைந்து வரும் மங்கல இசை:சிறப்புத் தொடர் பகுதி 7
Share
Subscribe
மங்கல இசைக் கருவிகளான நாகஸ்வரமும் மற்றும் தவிலும் ஆகியவை இணைபிரியாதவை.
ஆலய விழாக்கள், இசை நிகழ்வுகள் என எதுவாக இருந்தாலும் அது மேளக் கச்சேரி அல்லது நாகஸ்வரக் கச்சேரி என்று பொதுவாக சொல்லப்பட்டாலும், அந்த நிகழ்வுகளில் முதலாவதாக ஒலிப்பது தவில்தான்.
ஆலயங்களில் உற்சவ காலங்கள் தொடங்குவதற்கு முன்னர் யமபேரி என்று இசை நூல்களில் குறிப்பிடப்படும் தவிலுக்கு தனியாக பூசை செய்யப்பட்ட பின்னரே கொடியேற்றம் நடைபெறும் என்றும், உற்சவ காலம் முடிந்து கொடியிறக்கம் செய்யப்படும்போதும் தவிலுக்கு பூசைகள் நடைபெறும் என்பதும் ஆலயக் குறிப்புகள், ஆகம சாஸ்திரங்கள் மற்றும் இசை நூல்கள் ஆகியவற்றில் காண முடிகிறது.
தவிலுக்கு வேறு பல பெயர்களும் இலக்கியங்களில் காணப்படுகின்றன என்று கூறுகிறார் இசை ஆர்வலரும் தமிழிசை ஆய்வாளருமான நா மம்மது.
