"அரசுக்கு மதச் சாயம் கூடாது என்ற கொள்கை மதித்து நடக்கப்படுவதில்லை"
Dec 27, 2015, 05:34 PM
Share
Subscribe
தெலங்கான முதலமைச்சர் யாகம் நடத்தியிருப்பது மற்ற அரசியல் தலைவர்களும் செய்துவரும் பழைய தவறின் தொடர்ச்சிதான் என்று பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான ஞானி தமிழோசையிடம் கூறினார். அரசு பொறுப்பில் இருப்பவர்கள் மதச் சாயம் பூசிக்கொள்ளக்கூடாது என்ற அரசியல் சாசனக் கொள்கையை பல அரசியல் தலைவர்களும் மதித்து நடப்பதில்லை என்று அவர் தெரிவித்தார்.
