"தவ்ஹீத் ஜமாஅத்தின் ஷிர்க் ஒழிப்பு மாநாடு தர்க்காக்களை இடிக்க வழி வகுக்கும்"

Jan 27, 2016, 06:39 PM

Subscribe

தமிழ்நாட்டின் திருச்சியில் வரும் 31 ஆம் தேதியன்று மாநில அளவிலான 'ஷிர்க் ஒழிப்பு மாநாடு' ஒன்றை நடத்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாடுகளை செய்து வருகிறது.

இறைவன் ஒருவனே என்கிற முழக்கத்துடன் திட்டமிடப்பட்டுள்ள இந்த மாநாட்டிற்கு தமிழகத்தின் சில இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக 'ஷிர்க் ஒழிப்பு மாநாடு' நடத்த தடை விதிக்க வேண்டுமென, சுலைமான் மன்பை என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார். தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத் அமைப்பின் சார்பில் வழக்கு தொடுத்துள்ள, அந்த அமைப்பின் அமைப்பாளரான சுலைமான் மன்பை இந்த வழக்கைத் தொடுத்தது ஏன் என்பது குறித்து பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியை நேயர்கள் இங்கே கேட்கலாம்