தர்காக்களை இடிக்கச் சொல்வது ஏன்? தவுஹீத் ஜமாஅத் தலைவர் பேட்டி

Jan 27, 2016, 07:07 PM

Subscribe

தமிழ்நாட்டின் திருச்சி நகரில் ஜனவரி 31 ஆம் தேதியன்று மாநில அளவிலான 'ஷிர்க் ஒழிப்பு மாநாடு' ஒன்றை நடத்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாடுகளை செய்து வருகிறது.

"இறைவன் ஒருவனே" என்கிற முழக்கத்துடன் திட்டமிடப்பட்டுள்ள இந்த மாநாட்டிற்கு தமிழக இஸ்லாமிய அமைப்புகள் சில எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த எதிர்ப்பின் ஒரு பகுதியாக 'ஷிர்க் ஒழிப்பு மாநாடு' நடத்த தடை விதிக்க வேண்டுமென, தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத் அமைப்பின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பின்னணியில் 'ஷிர்க் ஒழிப்பு மாநாடு' நடத்த ஏற்பாடுகளை மேற்கொண்டு வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத்தலைவர் பக்கிர் முஹம்மத் பிபிசி தமிழோசைக்கு அளித்த பிரத்யேக செவ்வியில் இந்த மாநாட்டை எதிர்த்து தொடுக்கப்பட்டுள்ள வழக்குக்கு அவர் தரப்பு பதில் என்ன என்பது குறித்தும், தமிழ்நாட்டின் தர்காக்களை இடிக்கச் சொல்லி தாங்கள் பிரச்சாரம் மேற்கொள்வது ஏன் என்பது குறித்தும் விரிவாக விளக்கியிருக்கிறார்.

பிபிசி தமிழோசைக்கு அவர் அளித்த செவ்வியை நேயர்கள் இங்கே கேட்கலாம்.