இருந்தாலும் சிரிக்கின்றேன்

Aug 24, 2016, 08:19 AM

துளித் துளியாய் துகள் துகளாய் ஒடஞ்சேனே வெயில் வெயிலாய் தினம் கலங்கி வறண்டேனே இருந்தாலும் சிரிக்கின்றேன் -நீ மறந்தாலும் மரிக்கின்றேன் உன் நினைவால் தினம் தினமாய் திசை திசையாய் அலைகின்றேன் பொடிப் பொடியாய் படிப் படியாய் தொலைகின்றேன் புரியாமல் நடக்கின்றேன்- உன்னை தெரியாமல் கிடக்கின்றேன் உன் உறவால் நீ போகச் சொன்னால் எங்கே உயிர் மூச்சி வாழும் என்று அறியலயா தாய் போல் உன் பின்னால் வந்தேன் சேய் என்னை தெரிவில் விட்டால் முடியலயே உன் தோழில் சாய்தேன் நானும் உறவாடி தோய்தேன் நாளும் மறப்பதற்கா மணி ஓசை கேட்கும் கோயில் அலை பொங்கும் கடலின் ஓரம் இழுக்கிறதே