பெப்சி, கோக் குளிர் பானங்களுக்கு தடை ஏன்? விக்கிரமராஜா விளக்கம்

Jan 25, 2017, 05:05 PM
Share
Subscribe

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் உணர்வினை பிரதிபலிக்கும் வகையில் பெப்சி, கோக் உள்ளிட்ட வெளிநாட்டு குளிர் பானங்கள் மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் உள்ள ஏறக்குறைய 21 லட்சம் கடைகளில் விற்பனை செய்யப்படாது என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா பிபிசி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.