தாவரங்களுக்கு கூடுதலாகத் தமிழ்ப் பெயர்கள்: தமிழகத்தில் முன்னெடுப்பு
Share
Subscribe
தமிழகத்தில் தாவரங்களுக்கு தமிழ் பெயர்களை வைக்கும் ஒரு முயற்சி இப்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இப்போது பல தாவரங்களுக்கு சொல் வழக்கில் தமிழ்ப் பெயர்கள் இருந்தாலும், இன்னும் நூற்றுக்கணக்கான தாவரங்களுக்கும் அதன் உட்பிரிவுகளுக்கும் தாவரவியில்ரீதியான தமிழ்ப் பெயர்கள் இல்லை என்று இதில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறுகிறார்கள்.
தமிழகத்துக்கே உரிய தாவரங்களுக்கு மட்டுமல்லாமல், வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளிலிருந்து தமிழகத்துக்கு கொண்டுவரப்பட்ட தாவரங்களுக்கு தமிழ்ப் பெயர்களை சூட்டுவதன் மூலம், அதன் புரிதலும் அத்துடன் தொடர்புடைய சூழல் குறித்த புரிதலும் கூடுதலாக ஏற்படும் என இதில் ஈடுபட்டுள்ளவர்களில் ஒருவரான சென்னை கிறித்துவக் கல்லூரியின் பேராசிரியர் நரசிம்மன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
இப்படியான நடவடிக்கை மூலம் கிராமப்புறங்களில் இருக்கும் மாணவர்களுக்கு அறிவியில் அதிலும் குறிப்பாக தாவரவியலை நன்றாக புரிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும் எனவும் அதன் மூலம் அவர்களது கல்வியறிவு மேம்படக் கூடும் எனவும் தேசிய பல்லுயிர் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினராகவும் இருக்கும் டாக்டர் நரசிம்மன் கூறுகிறார்.
