அக்டோபர் 14, 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (14-10-2015) பிபிசி தமிழோசையில் இலங்கையின் போதைப் பொருள் வர்த்தகர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பது குறித்த செய்திகள், இலங்கை கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் பிள்ளையனுக்கு போலீஸ் காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது குறித்த செய்திகள், வழக்கு விசாரணையின்றி இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூன்றாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவருவது குறித்த செய்திகள், தாத்ரி படுகொலை சம்பவம் குறித்து மோதி தெரிவித்திருக்கும் கருத்துக்கள் தொடர்பாக ஒரு செவ்வி, சுபாஷ் சந்திரபோஸ் குறித்த ரகசிய கோப்புகளின் விவரங்கள் விரைவில் வெளியிடப்படுமென இந்திய அரசு கூறியிருப்பது பற்ற தகவல்கள் இன்றைய தமிழோசையில் இடம்பெற்றுள்ளன.