மோதியை எதிர்த்ததால் இணையத்தில் பாலியல் தாக்குதல்: காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி புகார்

Jan 05, 2017, 05:58 PM

Subscribe

நுற்றுக்கணக்கான அழைப்புகள், இரண்டு நிமிடங்களுக்கு ஒரு முறை தெரியாத நபர்களிடமிருந்து அழைப்புகள், வாட்ஸ்ஆப் மூலம் தகாத செய்திகள் என்று தொடர்ச்சியாக சமூக வலைத்தளத்தில் பாலியல் தாக்குதலுக்கு ஆளானதாகக் கூறுகிறார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி. செல்லாமல் ஆக்கப்பட்ட 500 மற்றும் 1,000 நோட்டுகள் பிரச்சனை 50 நாளில் முடிவுக்கு வரும் என்று அறிவித்த பிரதமர் மோதியின் வாக்குறுதி செயல்பாட்டிற்கு வரவில்லை என்று ஜோதிமணி பதிவிட்ட பிறகு, இணையத்தில் தன் மீதான பாலியல் தாக்குதல் தொடங்கியது என்கிறார். அவர் பிபிசிக்கு அளித்த பேட்டி